வழக்கமாக பொங்கல் பரிசில் 21 பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும், மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.