கேரள செல்கிறார் மோடி

கேரள வெள்ள பாதிப்புக்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி விசாரித்துள்ளார். இது குறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பினராயி விஜயனிடம் தற்போதைய நிலை குறித்து தொலைப்பேசியில் உரையாடினேன். கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். இன்று மாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை பார்வையிட செல்ல உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.