சென்னை அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறப்பு

சென்னை அண்ணா சாலையின் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் பிரமாண்ட சிலையை மேள தாளம் இசை முழங்க குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

ரூபாய் 1.7 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச்சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தில், வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என கலைஞரின் ஐந்து கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.