தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (மே 25) முதல் www.bim.edu/tncmf என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதற்காகவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.