நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டு குழு, யாத்திரை குழு ஆகியவற்றை அமைத்துள்ளது.

சோனியா காந்தி தலைமையில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகிய எட்டுப் பேரை உள்ளடக்கி அரசியல் விவகாரங்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செயல்பாட்டு குழுவில் பா. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி ஆகியோரை உள்ளடக்கிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

திக் விஜய் சிங், சச்சின் பைலட், சசிதரூர் ஜோதிமணி என ஒன்பது பேரை உள்ளடக்கிய பாரத ஜோடோ யாத்திரை ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.