என்.ஐ.பி.எம் புதிய உறுப்பினர்கள் சந்திப்பு

தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் (NIPM), கோயம்புத்தூர் சாப்டெரின் சார்பாக “புதிய வாழ்நாள் உறுப்பினர்களுக்கான சந்திப்பு – 2022” நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் புதிதாக வாழ்நாள் உறுப்பினர்களாக சேர்ந்த பல தொழில் நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகள் சுமார் 100 நபர்கள் புதிய உறுப்பினர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் செயலாளர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்தது கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு பரிசினை வழங்கினார்.

இந்த சந்திப்பில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின், கோயம்புத்தூர் சாப்டெரின் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் மணிமாறன், பொருளாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர்கள் ஸ்ரீனிவாசன், மீனாட்சி சுந்தரம், இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மூத்த உறுப்பினர்களான முத்துவேலப்பன் மற்றும் காந்திமதிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.