நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்! – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

மேலும் பத்தாம் வகுப்புக்கு மே 6, பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! ‘ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.