தென் சீரடி சக்தி சாய்ராம் கோயிலில் ராம நவமி விழா

புஞ்சை புளியம்பட்டி – பண்ணாரி சாலையில் அமைந்துள்ள தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோயிலில் ஸ்ரீ இராம நவமி 108 சங்காபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேகம் பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பஜனை மற்றும் பாடல்கள், பரதநாட்டிய நிகழ்ச்சி, அலங்கார பூஜை, பகல் ஆரத்தி, மகாபிஷேகம், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதிலும் இருந்து 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை கோயில் நிர்வாகி P.K.ஜெகநாதன் மற்றும் தி ஃபேஷன் பாய்ண்ட் ஊழியர்கள்
நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.