தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பசுமைகுடில் அடிக்கல் நாட்டும் விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் மேலாண்மை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் பயிர் வினையியல் துறையில் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுடன் கூடிய பசுமைகுடில் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட காட்சிக் கூடத்துடன் கூடிய பயிர் பூஸ்டர்கள் விற்பனையகம் துவக்க விழா புதன்கிழமை அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையேற்று அடிகல்நாட்டினார். அதன்பின் காட்சிக்கூடத்துடன் கூடிய பயிர் பூஸ்டர்கள் விற்பனையக கட்டிடத்தை திறந்து விற்பனையை துவக்கி வைத்தார்.

விழாவில் பல்கலைக்கழகத்தின் இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.