நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ மாணவிக்கு நிதியுதவி

நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் மதுமிதா என்ற மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி கோவை காளப்பட்டி, குரும்பபாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

கோவை நேரு நகர் அரிமா சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.

பன்னாட்டு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நடராஜன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிதை தொடர்ந்து கல்வி உதவித்தொகை, உறுப்பினர் சான்றிதழ், லயன்ஸ் பின், புத்தகம், நினைவு பரிசு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மருத்துவ மாணவி மதுமிதா என்ற பெண்ணிற்கு மாதம் பத்தாயிரம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் படிப்பிற்கு ( 5.50 லட்சம்) முதல் தவணையாக ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி தொகையை மாவட்ட ஆளுநர் நடராஜன், தலைவர் செந்தில்குமார் வழங்கினர்.

இதில் மாவட்ட முதல் பெண்மணி கலாமணி நடராஜன், கோவை நேரு நகர் அரிமா சங்க செயலாளர் முகம்மது, பொருளாளர் ஹரிஷ், கோவை ராயல் அரிமா சங்க தலைவர் சுரேஷ்குமார், செயலாளர்கள் விஜயராகவன், சின்னதுரை, பொருளாளர் கார்த்திக், காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்க தலைவர் திவாகர், செயலாளர்கள் குணசேகரன், மதன்குமார், பொருளாளர் சம்பத், மாவட்ட தலைவர் காளியப்பன், சூரிய நந்தகோபால் நாராயணசாமி, தனசேகரன், சச்சின் தாமஸ், முத்துவேல், ஆனந்தகுமாரி , கோபாலகிருஷ்ணன், நடராஜ், வட்டாரத் தலைவர் கனகராஜ், சங்க முன்னாள் தலைவர்கள் சுகுமார், நந்தகுமார், லோகநாதன், ஜெகதீஷ், சின்ராஜ், சுப்ரமணியம், முத்துக்குமாரசாமி, மோகன்ராஜ், வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ரங்கராஜ், ராஜேஸ்வரி, பிரேமலதா, சுப்பு, செந்தில்குமார், தேஜஸ்வினி, ரேவதி, மரகதம், அஸ்வினி சத்யபாமா உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.