அரோமா பேக்கரியின் 30 வது கிளை திறப்பு 

அரோமா பேக்கரியின் 30 வது கிளை கோவை சௌரிபாளையம், உப்பிலிபாளையம் பிரதான சாலையில் ஞாயிற்று கிழமை துவங்கப்பட்டது.

கோவையில் கேக் மற்றும் ஸ்நாக்ஸ், பால் பொருட்களுக்கென தனி முத்திரை பதித்து வரும் அரோமா பேக்கரி, நகரின் முக்கிய பகுதிகளில் தனது கிளைகளை விரிவுப்படுத்தி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

அந்த வகையில், இதன் புதிய கிளை கோவை சௌரிபாளையம், உப்பிலிபாளையம் பிரதான சாலையில் ஞாயிற்று கிழமை துவங்கப்பட்டது.

அரோமா பேக்கரியின் நிறுவன தலைவர் பொன்னுசாமி விழாவிற்கு தலைமையேற்று ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார்.

அரோமா பேக்கரியில் செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் நல்ல ஆதரவை அளித்து வருவதாகவும் இதன் நிறுவன தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார்.

மேலும், இப்புதிய கிளையில் அனைத்து வகையான க்ரீம் கேக்குகள், ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள், பால் பொருட்கள் என அரோமா பேக்கரியின் அனைத்து வகையான ஸ்நாக்ஸ் வகைகளும் உள்ளன.