தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் நூற்புழு மேலாண்மை பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் நூற்புழு மேலாண்மைக்கான பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள பாலமலை மலை கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 100 பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயிகள் பயிற்சி பெற்றனர். இவர்கள் வாழை, இராகி, கொத்தவரங்காய் போன்றவற்றை பயிர் செய்கின்றனர்.

இந்த பயிற்சியை உதவி பேராசிரியர் சுவர்ணகுமாரி வரவேற்புரையுடன் தொடங்கினார். அவர் அகில இந்திய திட்டம் பற்றி கூறியதுடன் மத்திய அரசின் பழங்குடி மக்களுக்கான சிறப்பு திட்டம் பற்றி விளக்கினார். அதன்பின் உதவி பேராசிரியர், பிரபு நூற்புழு மேலாண்மை முறைகளை எடுத்துரைத்தார். காடுகளை பாதுகாக்கும் முறைகளையும் மண்வளம் பேணும் முறைகளையும் முன்னோடி விவசாயி மரியா பிரான்சிஸ் விளக்கினார்.

இந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, விதைகள் மற்றும் உயிர்கொல்லி பூஞ்சாணம் (போக்கோனியா கிளாமிடோஸ்போரிய) வழங்கப்பட்டது.