அருள்மிகு திருமகள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி அருகில் அமைந்துள்ள எஸ்வீ கன்சல்டன்ட் & என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருமகள் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில் ஆதிசிவன் மற்றும் பார்வதி, வள்ளி தெய்வானையுடன்  சிவசுப்ரமணியர், தன்வந்திரி மற்றும் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகருடன் ராகு, கேது ஆகிய தெய்வங்கள் இடம்பெற்றுள்ளனர்.

தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இங்கு சிவன் லிங்கத்துடன் காட்சியளிக்காமல் உருவ வடிவில் பார்வதி தேவியுடன் அருள்பாலிப்பது சிறப்பம்சமாக உள்ளது.