“கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்”

  – 81 வது வார்டு திமுக வேட்பாளர்

பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியோடு வரவேற்பதாக கோவை மாநகராட்சி 81 வது வார்டு தி.மு.க வேட்பாளர் மார்க்கெட் மனோகரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள வார்டுகளில் கூடுதல் வாக்காளர்களை கொண்ட வார்டு என்ற சிறப்பு பெற்ற கோவை மாநகராட்சி 81 வது வார்டு பகுதியில் தி.மு.க.வேட்பாளராக மார்க்கெட் மனோகரன் களிமிறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

தீவிர பிரச்சாரத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் எழுச்சியோடு வரவேற்பதாக கூறிய அவர், கடந்த எட்டு மாத கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,100 வார்டுகளிலும் தி.மு.க.தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என உறுதி படக் கூறினார்.