கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.
கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடி மற்றும் சிசிடிவி கேமராவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் உமா, தெற்கு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் கணேஷ் குமார், சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சுகுணாபுரம் பகுதியில் குற்றங்களை கண்காணிக்க மற்றும் வாகன சோதனைகளை கண்காணிக்க இந்த கேமரா உதவும் என காவல்துறை அதிகாரி கூறினார்.