விவசாயிகள் முறையீட்டு கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வருகின்ற வெள்ளி(25.05.2018) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.