மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்

மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், மே 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மக்கள் நீதி மய்யத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். மே 30 முதல் ஜூன் 1 வரை ஒருங்கிணைத்தல் மற்றும் சமர்ப்பித்தல் நடைபெறுவதனால் அணைத்து உயர்நிலை குழு உறுப்பினர்களும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.