திருப்பூரில் லோட்டஸ் கண் மருத்துவமனை அதே தரம் புதிய இடத்தில்!

திருப்பூரில் உள்ள லோட்டஸ் கண் மருத்துவமனை, தற்பொழுது உள்ள இடத்திலிருந்து பல்லடம் ரோட்டில் திருப்பூர் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் அருகில் ஓர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அனைத்துவித கண் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இம்மருத்துவமனையில் அனுபவமிக்க கண் மருத்துவர்கள் மற்றும் கண் பரிசோதகர்கள் உள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் கண் சிகிச்சையில் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை உடனுக்குடன் அறிமுகம் செய்வதில் முன்னோடியாக லோட்டஸ் கண் மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. கடந்த வருடங்களில் திருப்பூரில் இம்மருத்துவமனையில் சுமார் 6 லட்சம் பேருக்கு கண் பரிசோதனையும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது.

லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி பேசுகையில், “மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப இந்த புதிய மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பும், நவீன தொழில் நுட்பம் கொண்ட உபகரணங்களுடன் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வை குறைபாடு, சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பார்வை குறைபாடுகள், குளுகோமா போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்

இந்த அதி நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையை கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி மற்றும் முதன்மை தலைமை அதிகாரி ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினர்.

மேலும், தொடக்க விழா சலுகையாக டிசம்பர் 31-ம் தேதிவரை அனைத்துப் பொது மக்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனை இலவசமாக செய்யப்படும்.

மேலும் விபரங்களுக்கு: 7708 111 017