பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்வு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களின் சார்பாக தலா இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர்கள் சார்பாக வெள்ளக் கோவில் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணகுமார், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்லூரி பேராசிரியர்கள் சார்பாக பார்க் கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறைத் தலைவர் செந்தில்குமார், பல்லடத்தில் உள்ள புரட்சித் தலைவி அம்மா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சிக்குழுவில் பணியாற்றுவார்கள்.

இவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மற்றும் பதிவாளர் முருகவேல் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

வெற்றி பெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நான்கு பேரும் கூறுகையில்: “பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றிகளைக் கூறி கொள்வதோடு பல்கலைக்கழக வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்” என்று கூறினர்.