கே.ஐ.டி கல்லூரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரில், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் ந பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், கல்லூரியின் டீன் ராமசாமி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர்.