வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.டி.சி கல்லூரி

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான C மண்டல வாலிபால் போட்டிகள் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் C மண்டலத்திற்குட்பட்ட 10 கல்லூரிகள் பங்கேற்றன. இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி மற்றும் எஸ்.என்.எம்.வி கல்லூரிகள் மோதின.

இதில் எஸ்.டி.சி அணியினர் 2:0 என்ற செட்களில் வெற்றி பெற்றனர். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பொள்ளாச்சி எஸ்.டி.சி மற்றும் கோவை ரத்தினம் அணிகள் மோதின. இதில் எஸ்.டி.சி அணி 3:0 என்ற நேர் செட்களில் வென்று C மண்டல சாம்பியன் பட்டம் வென்றனர். மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கோவை நேரு அணியினர் கோவை எஸ்.என்.எம்.வி அணியினரை 2:0 என்ற செட்களில் வென்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.சி-ன் முதன்மை இயக்குநர் நந்தகோபால், தமிழ்நாடு வாலிபால் கழகத்தின் இணை செயலர் செல்லமுத்து, உடற்கல்வித்துறை இயக்குநர் பாரதி, பயிற்சியாளர் சந்திர சேகரன் நாயர், துணை இயக்குநர்கள் ரேவதி, சதாம் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.