‘கலா சங்கலன் 18’ ஓவியக் கண்காட்சி

கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் 169வது ‘கலா சங்கலன் 18’ ஓவியக் கண்காட்சி இன்று (25.04.18) துவங்கியது. வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 ஓவியர்களின் ஓவியங்கள், கர்நாடகா மற்றும் கேரளா மாநில ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை ஆர்.ஏ.ஏ.சி செயலாளர் ஆர்.ரவீந்திரன் துவக்கி வைத்தார். காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.