பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை கோவை சரக டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பிருந்தா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலாளர் கண்ணையன், துணை முதல்வர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் சமூக பணி துறை பேராசிரியர் ராஜேஷ்வரி வரவேற்புரை வழங்கினார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.