ஆதித்யா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா

ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தொடக்கவிழா (06.10.2021) நடைப்பெற்றது. நிகழ்வினை ஆதித்யா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சுகுமாரன், ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் குழந்தைசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் செந்தில் குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். தனது வரவேற்புரையில் கல்லூரியின் தனித்துவம் மற்றும் சிறப்பு அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். ஆதித்யா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சுகுமாரன் நிகழ்வில் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் கல்லூரியின் நோக்கம் மற்றும் தங்களுக்கான தேவைகளை மாணவர்கள் கேட்டறியும் ஆளுமைத்திறன் கொண்டிருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் இன்றைய சூழலில் தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தையும் ஈடுபாட்டுடன் கல்வியை கற்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களின் நோக்கத்தின் மீதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் தனது உரையில் கூறினார்.

ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் குழந்தைசாமி நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று கூறினார்.