காவல் அதிகாரிகள் 34 பேருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

கொலை கொள்ளை வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசார் 34 பேருக்கு கோவை சரக காவல்துறை துணைத்‌ தலைவர்‌ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில்‌ கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த கொலை,வழிப்பறி, விடு புகுந்து திருடுதல்‌, மற்றும்‌ காணாமல்‌ போனவர்களை கண்டுடித்தல்‌ ஆகிய வழக்குகளை துரிதமாகவும்‌, திறம்படவும்‌, செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்‌ அதிகாரிகளுக்கு பாராட்டு விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலலத்தில் நடைபெற்றது.

இதில் ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்களுக்கும், காவல்‌ குடியிருப்பை தூய்மையாக பராமரித்து வந்த காவலர்களுக்கு என மொத்தம்‌ 34 பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை கோவை சரக காவல்துறை துணைத்‌ தலைவர்‌ முத்துசாமி வழங்கினார்.

மேலும்‌ கோவை காவல்‌ மாவட்ட காவல்துறையில்‌ பணிபுரியும்‌ 14 காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதை களைவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில்‌ கோவை மாவட்ட கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கூடுதல் கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ காவல்‌ துணை கண்காணிப்பாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.