கே.பி.ஆர் கல்லூரியில் ரோட்ராக்ட் மன்றம் தொடக்க விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ரோட்ராக்ட் மன்றம் (Coimbatore central Group 3 / Rotary international district 3201) தொடக்க விழா திங்கட்கிழமையன்று (16.08.2021) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக, கோயம்புத்தூர், ரோடராக்ட் மன்றம், மாவட்ட ஆளுநர் ராஜசேகர ஸ்ரீனிவாசன் கலந்துக் கொண்டார். கே.பி.ஆர் குழுமத் தலைவர் கே.பி. ராமசாமி சிறப்பு விருந்தினருக்கு மரியாதைச் செய்தார்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் ரோட்ராக்ட் மன்றத்தில் இணைந்தார்கள். அதில் மாணவர் ஜாதவேதாஸ் தலைமைப் பொறுப்பேற்றார். அவருடன் பிற மாணவர்களும் ரோட்ராக்ட் மன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கு கோயம்புத்தூர் மாவட்ட ரோட்ராக்ட் மன்ற நிர்வாகி கீர்த்தி விவேக், ரோட்டரி மன்ற தலைமை சுப்பிரமணியன், மற்றும் நிர்வாகி பியூஸ் பட்வா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் ரோட்ராக்ட் மன்ற நிர்வாகிகள், ரோட்டரி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.