கே.பி.ஆர் கல்லூரியில் “ஆரோக்கிய இந்தியா ஓட்டம்”

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையினரால் தொடங்கப்பட்ட “ஆரோக்கிய இந்தியா ஓட்டம்” கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஓட்டத்தினை கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் முதன்மை செயலர் எம். நடராஜன் முன்னிலையில் முதல்வர் அகிலா மற்றும் முனைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி நிர்வாக பிரிவில் தொடங்கிய இந்த ஓட்டம் பல்வேறு பாதைகளை கடந்து முதன்மை வாயிலை அடைந்து மீண்டும் கல்லூரி கலையரங்கத்தை அடைந்து முடிவுக்கு வந்தது.

ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரம் கடந்த இந்த ஓட்டத்தின் முடிவில் வேதியியல் துறையைச் சேர்ந்த முனைவர் திரிவேணி ராஜசேகர் மற்றும் முனைவர் சூரியகாந்த “உடல் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.