வானதி தலைமையில் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி

தேசிய கைத்தறி நாள் , நெசவாளர்களை நினைவு கூறும் வகையில்  (ஆகஸ்ட் 7) கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம் சோன் இணைத்து நடத்திய கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள பல கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த கைத்தறி தினத்தையொட்டி, ஸ்ரீ ராமலிங்கா சௌடாம்பிகை கல்லூரியில் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.