கொரோனா 3வது அலையை தடுக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உறுதிமொழியேற்பு

கொரோனா 3-வது அலை ஏற்படாமல் தடுப்போம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்றனர்.

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி சார்பில் ‘கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு’ நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அறங்காவலர் சி.வி.ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைத் தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.நிர்மலா, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் செல்வராஜ் மற்றும் மருத்துவமனை, செவிலியர் கல்லூரி ஊழியர்கள்மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.