மறைந்த அதிமுக அவைத் தலைவருக்கு கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் மலரஞ்சலி

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கருப்பு பேட்ச் அணிந்து மறைந்த அதிமுக அவை தலைவர் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் அதிமுக உறிப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.