கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

ரயில் நிலையம் மற்றும் வாளையார் சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார்.

கோவையில் கொரோனா தொற்று சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவையில், தமிழ்நாடு கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 24 மணி நேர சுழற்றி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து வாளையார் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.