சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு!

சக்திவாய்ந்த கதிர்வீச்சுப் புயல் இன்று பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால், செல்போன் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூரியனின் கரும்புள்ளிகள் பரப்பில் அதிக கதிர்வீச்சு கொண்ட புயல் உருவாகியிருப்பதாகவும், அவை பூமியை நோக்கி வருவதாகவும் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கரும்புள்ளிகள் என்பது சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் கருப்புள்ளிகள் பரப்பில் வெப்பலை சற்று குறைவாக இருக்கும்.

அந்த இடத்தில் தற்போது உருவாகியிருக்கும் புயலானது மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. அவை அதிகபட்சம் இன்று பூமியின் காந்தப் புலத்தை தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் காந்தப்புலம், மிக வலுவாக இருப்பதால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படாது என்றும், ஒரு வேளை கதிர்வீச்சின் தன்மை அதிகமாக இருந்தால் பூமியின் மேற்புறத்தில் இருக்கும் செயற்கோள்களை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், ஜி.பி.எஸ், செல்போன் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நாசாவின் கூற்றுப்படி, சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் புயலானது சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் சுழன்று அடிப்பதாகவும், 1.6 மில்லியன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் சூரியப் புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளனர். அதேநேரத்தில் சூரியப் புயல் ஏற்படுத்தும் சேதம் குறித்து விண்ணெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகை பகுதிகளில் இதன் பாதிப்பை உணர முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியப் புயல் குறித்து வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறும் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சூரியப் புயல் குறித்து உன்னிப்பாக கவனித்து வரும் சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். அவற்றின் துணை பொது இயக்குநர் டாக்டர் இலியாஸ் பெர்னினி பேசும்போது, பூமியை நோக்கி வரும் சூரியப் புயல் குறித்து கவனித்து வருகிறோம், பூமியின் மேற்பரப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அளவிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பூமியின் காந்தப்புலங்கள் பாதுகாப்பு கவசமாக இருந்தாலும், அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரியப் புயலில் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின் அதிர்வுகள் ஏற்படத்தை சுட்டிக்காட்டியுள்ள பெர்னினி, அவற்றில் இருந்து வெளிப்பட்ட ஒளியால் அப்பகுதியில் இரு நாட்களுக்கு பிரகாசமான ஒளி வீசியதாக குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுகளில் இருந்த சூரியனில் இருக்கும் கரும்புள்ளிகள் மூலம் இதேபோன்ற புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பெர்னினி தெரிவித்துள்ளார்.

 

Content : sourced