நானே வருவேன் ஆகஸ்ட் 20 ல் துவக்கம் – செல்வராகவன் டுவீட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். தனது சகோதரரான தனுஷை வைத்து துள்ளுவதோ என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்நது காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மீண்டும் தனுஷுடன் கடைசியாக அவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது.

அடுத்ததாக இயக்குநர் செல்வராகன் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார். தனுஷின் நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஆகஸ்ட் 20 ல் துவங்கவுள்ளதாக தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.