தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 2 கோடி நிதி

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு கோடிக்கான காசோலையை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமய மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிதியானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர், வேளாண் உதவி அலுவலர்கள், நிரந்தர பண்ணை தொழிலாளர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து அளித்த இரண்டு நாள் ஊதியமும் மற்றும் மாணவர்களின் பங்களிப்பும் சேர்ந்ததாகும்.

தமிழக பல்கலைக்கழகங்களில் முதலாவதாக முன்வந்து நிதியளித்தமைக்காக தமிழக முதலமைச்சர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.