“முதல்வருடன் ஆலோசித்த பின்னர் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி “

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து பிறகு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (24.05.2021) தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துக்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனவும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.