இறைச்சி கடைகளில் அலைமோதும் அசைவ பிரியர்கள்

நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவையில் இன்றே இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் அசைவ பிரியர்கள், ஆட்டு இறைச்சி அல்லது கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால் நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவை மாநகர பகுதியில் அசைவ பிரியர்கள் மீன் கடை, கோழி மற்றும்  ஆட்டு இறைச்சி கடைகளில் கறிகள் வாங்குவதற்கு அலைமோதுகின்றனர். கொரோனா தொற்று மத்தியில் இறைச்சி கடைகளில், அசைவ பிரியர்கள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.