முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீளமேடு மற்றும் நவ இந்தியா பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன்   இன்று (15.4.2021)ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு நடவடிக்கையின் போது சில்லறை விற்பனை கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறியுறுத்தி, கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தார்.

இதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதித்தார்.

மேலும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம்சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அறியுறுத்தினார்.