அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்

தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்ட ஆரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆரியர் தேர்வுகள் ரத்து செய்ததை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தமிழக அரசு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலமோ, நேரடி தேர்வோ இல்லாமல் சான்றிதல்கள் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இந்த தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த தேர்வுகளை 8 வாரங்களில் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.