மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு  

கோவை மாநகரில் சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட கொடி அணிவகுப்பில், துப்பாக்கி ஏந்திய போலீசார் நிகழ்ச்சியில் (5.3.2021) பங்கேற்று நடந்து சென்றனர்.

தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டது.

மாநகர காவல்துறையினருடன் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப் மற்றும் ஊர்காவல் படையினர் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி பேன்டு வாத்தியங்கள் முழங்க இந்த கொடி அணிவகுப்பில் போலீசார் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கொடி அணிவகுப்பிலும் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

கோவை வின்சன்ட் ரோட்டில் இருந்து உக்கடம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும், மரக்கடை பகுதியிலிருந்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும், டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து ரத்தினபுரி பகுதி வரை ஓரு அணிவகுப்பும் என 3 இடங்களில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.