கே.பி.ஆர் கல்லூரியில் தொழில் முனைவோர் குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில்    ஆன்ட்ரப்ரனர் மைன்ட்செட் & பி.எம்.எஸ் ஓவர்வியூ (ENTREPRENEUR MINDSET & BMS OVERVIEW) என்னும் தலைப்பில் கணிணி அறிவியல் துறையின் சார்பாக (30/03/2021) கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வின் தலைமையுரையினைக் கல்லூரி முதல்வர் பாலுசாமி வழங்கினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக, (Startuppayanam Community & Accelerator, Founder & Ideator) நவீன் கிருஷ்ணா அவர்கள் கலந்துகொண்டு,

இணையத்தின் துணைகொண்டு மிகவும் எளிதாகத் தரவுகளைச் சேகரித்து அதை முறைப்படுத்தித் தொடக்கம் முதலே தரவுப் பகுப்பாய்வு செய்து முறையாக வகைப்படுத்த வேண்டும் என்றும், இன்றைய கணிப்பொறி உலகில் தரவுகளை எப்படி கையாள்வது என்று கூறினார்.

தொழில் முனைவோர் தரவுகளின் மூலம் செயல்பாடுகளை நிறைவு செய்வது எப்படியென்றும் தரவுகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.