ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் வேலுமணி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குனியமுத்தூர், சுகுணாபுரம் மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் (31.3.2021)மேற்கொண்டார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொது மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .

அப்போது மைல்கல் பகுதியில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன்   ஒயிலாட்டம் ஆடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.