அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் – பையா ஆர்.கிருஷ்ணன்   

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் பையா ஆர்.கிருஷ்ணன் சரவணம்பட்டி பகுதியில் இன்று (25.03.2021)  வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் தி.மு.க ஆட்சி அமைவதோடு, என்னை வெற்றி பெறச் செய்வீர்களானால் நமது சரவணம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாக்கடை வடிகால் பிரச்சனை, சாலை வசதிகள், தெரு விளக்கு அமைப்பது மற்றும் தேவையான இடங்களில் சமுதாய கூடங்கள் அமைப்பது போன்ற மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இப்பிரச்சார பயணத்தின் போது சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமுவேல்தாஸ், பகுதி தலைவர் ரகுராமன், தி.மு.க வின் பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி, பகுதி பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, சி.பி.ஐ கட்சியின் தொகுதி பொறுப்பாளர் வி.ஆர்.பாண்டியன், ம.தி.மு.க வின் விஷ்வராஜ், ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துவளவன், சி.பி.எம் சண்முகம், செல்லக்குட்டி, குட்டி, ஜெகநாதன், கொ.ம.தே.க வின் நாகராஜ், குருசாமி, அசோக், சங்கீத், தேவராஜ் மற்றும் தி.மு.க வின் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், வட்ட கழகச் செயலாளர்கள் வசந்தராஜ், முகம்மது நூர்தீன், கதிர்வேல், ரங்கசாமி மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மனோகரன், கந்தசாமி, சோமசுந்தரம், பொன்விஜயன் மற்றும் பாபு, எஸ்.பி.துரை, ஜோதிமணி, சங்கீத்மணிகண்டன், ரமேஷ் குழந்தைவேல், ஆறுக்குட்டி, அருள்முருகன், கண்ணன், பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நவீன், ராயல் கண்ணன், முருகேசன், எஸ்.ஆர்.சண்முகம், ராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் திரளாக கலந்து கொண்டனர்.