மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் பணியிட மாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகர் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள்   பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் என்பவரையும், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவரையும் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராசாமணி மற்றும் சுமித் சரண் ஆகிய இருவரையும் தேர்தல் அல்லாத பணிகளில் பணியமர்த்துமாறும் மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.