பீளமேடு சென்ட்ரல் வங்கி மூடல்

கோவையில் சென்ட்ரல் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் செயல்படும் வரும் சென்ட்ரல் வங்கியை சேர்ந்த மூன்று ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்:

வங்கி ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வங்கியை சுற்றிய பகுதிகள்  கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, இந்த வங்கியில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. என்றனர்