சிங்காநல்லூர் முன்மாதிரி தொகுதியாக மாற்றியமைக்கப்படும் – மகேந்திரன்  

மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் துனைத் தலைவர் மகேந்திரன் சிங்கநல்லூரில் உள்ள முக்கிய பகுதிகளில் புதன்கிழமை (17.03.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அவர், அடிப்படை மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து இத்தொகுதி மற்ற தொகுதிகளுக்கு ஒரு முன் மாதிரியாக மாற்றி அமைக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர், குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக பிரச்சாரம் செய்து, வார்டு வாரியான முன்னேற்றங்களையும், சாலை, நிலத்தடி வடிகால், நீர் வழங்கல் போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் பழுதுபார்த்து மீட்டெடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார்.

மேலும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தன்னை சுலபமாக அணுகி தங்களின் குறைகளை கூறலாம் எனவும் தொழில்துறை வளர்ச்சி மற்றும்  கூடுதல் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதாகவும்  கூறினார்.