அமைச்சர் வேலுமணியிடம் வாழ்த்துபெற்ற வானதிசீனிவாசன்

கோவையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணியிடம் வாழ்த்துபெற்றார் வானதிசீனிவாசன்.

தமிழக சட்டபேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்களிடையே வரவேற்ப்பு அதிகரித்து உள்ளது. அதன் ஒருபகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் வெற்றி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனை வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது. அதனை தொடர்து அவர் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கோவை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.