ராமர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நாட்டியாஞ்சலி

கோவை ராம்நகரில் உள்ள ராமர் கோவிலில் மண்டல பூஜையை முன்னியிட்டு மஹா சிவராத்திரி விழா, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் நேற்று (11.3.2021) மாலை 6.00 மணிக்கு தொடங்கி இன்று காலை 6.00 மணிவரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நாட்டியாஞ்சலியில் 10 நாட்டிய குழுவினர் பங்கேற்றனர். ஒவ்வொரு நடன குழுவும் அவர்களின் தனி திறமைகளின் மூலம் விதவிதமான நிகழ்வுகளை அரங்கேற்றினர். மேலும், இந்த நடன நிகழ்ச்சியில் 150 குழந்தைகளும் பங்கேற்று அவர்களின் திறமைகளை கட்டினார்கள். பின்னர் நாட்டிய குழுக்களுக்கு ராமர் கோவில் செயலாளர் மோஹன் சங்கர் நினைவு பரிசினை வழங்கினார்.