இந்துஸ்தான் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவிக்கு சர்வதேச விஞ்ஞானி விருது

சர்வதேச விஞ்ஞானி விருதுகளை கோவை இந்துஸ்தான் கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவி வென்றனர்.

கோவை: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் உதவி பேராசிரியர் அருண் குமார் மற்றும் ஆராய்ச்சி மாணவி தீபாலக்ஷ்மி, ஆகிய இருவரும், பாண்டிச்சேரியின் வி.டி.குட் தொழில்நுட்ப தொழிற்சாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020-2021 ஆண்டிற்கான பொறியியல், அறிவியல் மற்றும் மருத்துவம் தொடர்பான சர்வதேச விஞ்ஞானி விருதுகளில் கடல் உயிரியல் மற்றும் நரம்பணு உருவாக்கம் அறிவியலில் பங்களித்ததற்காக ‘வளர்ந்து வரும் விஞ்ஞானி’ என்ற விருதைப் பெற்றனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஸ் பிரபு மற்றும் முதல்வர் பொனுசாமி ஆகியோர் விருது வென்றவர்களை  கெளரவித்தனர்.