கோபி செட்டிபாளையத்தில், ‘சிகே மோட்டார்சின்’ மின்சார வாகனங்களின் புதிய ஷோரூமை பள்ளிக் கல்வித் துறை மற்றும் இளைஞர் நலன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஞாயிறு (31.1.2021) அன்று திறந்து வைத்தார். அவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மாசில்லாத சுவாசத்தை உணரும் வகையில், மக்களின் பசுமை போக்குவரத்தை உறுதி செய்யும் வாகன அணி வகுப்பையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
‘சிகே மோட்டர்ஸ்’ நிறுவனம் மின்சார ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் மூன்று சக்கர சரக்கு வாகனங்களுக்கான ஷோரூம்களை தற்போது திறந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ‘சிகே மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சந்திர சேகர், இணை நிர்வாக இயக்குனர் கிருஷ்ண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிறுவனம் இந்தியாவின் சில முன்னணி மின்சார வாகன நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் டீலர்களின் ஆதரவோடு இந்தியா முழுவதும் புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது என அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு மூலமாக தெரிவித்தது. இருசக்கர வாகன பிரிவில் இதன் விலை 45 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது என்று நிர்வாக இயக்குனர் சந்திர சேகர் தெரிவித்தார் .