காந்திபுரம் மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, காந்திபுரம் சக்தி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை வைக்க வலியுறுத்தி இந்து மக்கள் புரட்சி படையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை காந்திபுரம் சத்தி ரோடு மேம்பாலத்திற்கு மறைந்த தேசத்தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரை வைக்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.